Friday, 21 September 2012

உண்ணவிரதம்


நேற்று பொதுவேலை நிறுத்தம் அறிவித்து இருந்தார்கள் இந்தியாவில் உள்ள பொறுப்புள்ள(?) எதிர் கட்சிகள். பொதுவேலை நிறுத்தத்தால் இதுவரை எதையும் நாம் சாதிக்கவில்லை. எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அதுவும் தற்போது ஆளும் அரசு மக்களை பற்றி எப்பொதும் கவலைபட்டதாக தெரியவில்லை. ஆனாலும் பொதுவேலை நிறுத்தம் அறிவித்து இருந்தார்கள் எதிர் கட்சிகள். பதிப்பு என்னவோ மக்களுக்கு தான் என்றாலும் அதிகம் பாதிக்கப்பட்டது என்னை போன்ற பேச்சிலர்கள் தான். காரணம் பொதுவேலை நிறுத்தம் என்றால் எந்த உணவகமும் இருக்காது. மீறி திறக்கும் உணவகங்களை கண்டிப்பாக மூடசொல்லிவிடுவார்கள். ஆனால் சாராய கடைகள் திறந்து இருக்கலாம் அதற்கு எந்த தடையும் இல்லை. நேற்று என்னை போன்ற பேச்சிலர் பாடுதான் திண்டாட்டம். ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்பதால் நான் தினசரி சாப்பிடும் கடையில் முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை கடைசி நேரத்தில் அவர் கைவிரித்துவிட்டார். நேற்று காலை முதல் உணவு தேடி நகரத்தில் அலைந்தேன் எங்கேயுமே உணவகங்கள் திறந்திருக்கவில்லை. சரி நாம் இன்று உண்ணவிரதம் தான் என்று முடிவு எடுத்து நேற்று முழுவதும் உண்ணாமல் இருந்தேன். அரசியல் கட்சி நண்பர்களே சற்று சிந்திக்கவும்....

No comments:

Post a Comment